×

மூணாறு அருகே பெண் மர்மமான முறையில் இறப்பு

மூணாறு, மே 22: கேரளா மாநிலம், மூணாறு அருகே பூப்பாறை எஸ்டேட்தில் வசித்து வருபவர் பால்ராஜ். இவர் மனைவி முருகேஸ்வரியை கடந்த 18ம் தேதி முதல் காணவில்லை. உறவினர்கள் வீடு மற்றும் அக்கம்பக்கம் எங்கு தேடியும் காணவில்லை. இதுகுறித்து பால்புராஜ் புகாரில், சாந்தன்பாறை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பால்ராஜ் வீட்டின் அருகே உள்ள பூட்டி கிடந்த வீட்டில் முருகேஸ்வரி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

தகவலறிந்து வந்த சாந்தன்பாறை ேபாலீசார் முருகேஸ்வரியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பெண்ணின் உறவினர்கள் முருகேஸ்வரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

The post மூணாறு அருகே பெண் மர்மமான முறையில் இறப்பு appeared first on Dinakaran.

Tags : Munnar ,Balraj ,Bhupara Estate ,Munnar, Kerala ,Murugeswari ,
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்